நரபலியிடும் சாமியாருக்குத் தெரியும்
குழந்தைப்பேறு வேண்டிவரும்
பேதைப் பெண்ணை வஞ்சித்துப் புணரும்
சாமியாருக்குத் தெரியும்
உண்டியல் பணத்தில்
பொய்க் கணக்கு காட்டும்
குருக்களுக்குத் தெரியும்
கன்னியாஸ்திரியை வன்புணர்ச்சி செய்யும்
பாதிரியாருக்குத் தெரியும்
ஆசிரமத்தைக் காமச் சுரங்கமாக்கும்
ஆனந்தாக்களுக்குத் தெரியும்
தர்காவுக்கு வருபவர்களிடம்
மந்திரித்துப் பணம் பறிப்பவருக்குத் தெரியும்
கருவறையில் காமுகனாக உருமாறும்
அர்ச்சகருக்குத் தெரியும்
'தொழில் ' சேவை புரியும்
மாது அதிபர்களுக்குத் தெரியும்
நடிகையை பூஜித்தனுப்பும்
இளந்துறவிக்குத் தெரியும்
கணக்கு கேட்கும் நிர்வாகியின்
' கணக்கை முடித்துவிடும் '
மடாதிபதிக்குத் தெரியும்
...............................தெரியும்
.................................தெரியும்
..................................தெரியும்
'தவறு செய்பவர்களின் கண்ணை
சாமி குத்தாது' என்பது.
-------------------------------------------------------
No comments:
Post a Comment